jino

Aug 19, 2025

உலகம்

மியன்மாரில் டிசம்பரில் பொதுத் தேர்தல்.

மியன்மாரில் வருகிற டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 28 ஆம் திகதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் பெரும்பாலான பகுதிகள் ஜனநாயக ஆதரவு போராளிகள், சிறுபான்மை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

முக்கிய செய்திகள்

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp