jino
Aug 13, 2025
விளையாட்டு
ஐ.சி.சி உயரிய விருதை வென்றார் "சுப்மன் கில்" !
ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து அவர்களை கௌரவித்து வருகிறது.
அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. சமீபத்தில் அறிவித்தது.
இந்தப் பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் சுப்மன் கில், தென்னாபிரிக்காவின் வியான் முல்டர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் சுப்மன் கில் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
இந்த விருதை ஏற்கனவே 3 முறை வென்றுள்ள சுப்மன் கில் இவ்விருதை 4வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 4 சதங்களோடு அதிக ஓட்டங்களை குவித்ததால் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து மகளிர் அணியில் சோபியா டன்க்லி ஜூலை மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All