jino
Aug 13, 2025
விளையாட்டு
இந்தியா - அவுஸ்திரேலியா ஒருநாள் தொடர் - மீண்டும் அணித்தலைவராக ரோஹித் !
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. இத் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் அக்டோபர் 19 திகதி ஆரம்பமாகவுள்ளது.
அந்த தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மா மீண்டும் அணித்தலைவராக வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அணித்தலைவர் ரோஹித் சர்மா இந்திய அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவராக இந்திய டெஸ்ட் அணித் தலைவர் சுப்மன் கில் நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All