2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்

உள்ளூர்February 10, 2026 · 6 months முன்1

இலங்கையின் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலித்தமைக்காகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்குப் பாகிஸ்தான் அணி தீர்மானித்தமை குறித்து, தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இந்தத் தீர்மானமானது விளையாட்டுத்திறன், நட்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளின் வலிமையை பிரதிபலிக்கிறது என்றும் அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.