Search

SEGU

Nov 22, 2025

உள்ளூர்

கடுகண்ணாவ பகுதியில் பாரிய மண்சரிவு : சிக்கியவர்களை மீட்க்கும் பணிகள் முன்னெடுப்பு

கண்டி, கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று காலை பெய்த கனமழை காரணமாக, கடையொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடைக்குள் இருந்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் மாவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளுக்குள் சிக்குன்றவர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

கண்டி-கொழும்பு பிரதான வீதிக்கு அருகில் உள்ள கணேதென்ன பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் மீதே இவ் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All