
admin
Jul 23, 2026
உள்ளூர்
மகாவலி ஆற்றில் நீராடிய சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா?

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
மூன்று சிறுவர்கள் இணைந்து ஆற்றில் நீராட சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஏனைய 2 சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில், பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






