Search

admin

Jan 24, 2026

உள்ளூர்

விளக்கமறியலில் உள்ள பலங்கொட காசியப்ப தேரர் வைத்தியசாலையில் ...

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட காசியப்ப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவப் பரிசோதனைக்காக பலங்கொட காசியப்ப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். 

அண்மையில் திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில், பலங்கொட காசியப்ப தேரர் உட்பட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 06 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

அதற்கமைய, பலங்கொட காசியப்ப தேரருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, இரத்தப் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All