Oct 24, 2025
உலகம்
பாப்பரசர் - இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை.
கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்துள்ளனர்.
இவ் பிரார்த்தனை மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியமான தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்டின் கீழ் உள்ள சிஸ்டைன் சேப்பலில் ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் பிரார்த்தனை நடைபெற்றது.
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு பிரார்த்தனை இதுவாகும்.
தங்கள் தேவாலயங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்காக மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வத்திக்கானுக்கு வருகை தந்து இவ் புனித பிராத்தனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








