Search

Oct 23, 2025

உலகம்

பெருவில் அவசரநிலை பிரகடனம் !

தென் அமெரிக்க பெருவில் இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்த, தலைநகா் லீமா மற்றும் அருகிலுள்ள கல்லாவ் துறைமுகத்தில் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி அவசரநிலையை அறிவித்துள்ளாா்.

நேற்று புதன்கிழமை (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த அவசரநிலை 30 நாட்களுக்கு நீடிக்கும் என்று அவர் அரச தொலைக்காட்சியில் வெளியிட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

பெருவில் வன்முறை பேராட்டம் ஓயாததால், சட்டம், ஒழுங்கை மீட்க அவா் தற்போது அவசரநிலையை அறிவித்துள்ளாா்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All