Search

Sep 27, 2025

உலகம்

நெதன்யாகுவின் உரைக்கு ஐ.நா சபையில் எதிர்ப்பு.

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்தபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அவருக்கு எதிர்ப்பாக அவையை விட்டு வெளியேறினர்.

மேலும், நெதன்யாகு உரையில் “பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது. அந்த அங்கீகாரம், இஸ்ரேலியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் வெட்கப்பட வேண்டும். சிறிய ஆதரவுடன் சுமார் ஏழு மோதல்களை இஸ்ரேல் கையாள்கிறது” என்று பேசினார்.

அவரது உரையின்போது அதிகமான இருக்கைகள் வெற்றிடமாக இருந்தன. இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவரது உரை, காஸா எல்லையில் நேரடியாக ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All