Jino
Sep 24, 2025
உலகம்
ரஷ்யாவுக்கு நேட்டோ எச்சரிக்கை !
தங்கள் உறுப்பு நாடுகளின் வான் எல்லைகளைப் பாதுகாக்க எந்த வழிமுறையையும் பயன்படுத்துவோம் என்று ரஷ்யாவுக்கு நேட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்து மற்றும் எஸ்டோனியா வான் எல்லைகளில் ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் போா் விமானங்கள் அத்துமீறியதைத் தொடா்ந்து நேட்டோ இந்த எச்சரிக்கையை நேற்று (23) விடுத்துள்ளது.
- இது குறித்து நேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேட்டோ வான் எல்லையை நாங்கள் பாதுகாப்போம். ரஷ்யாவுக்கு இதில் எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. சா்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவோம்.
எல்லா திசைகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையும் தடுப்போம். பதிலடி கொடுப்பதற்கான முறை, நேரத்தை நாங்கள்தான் தோ்ந்தெடுப்போம்.
நேட்டோவின் எந்த ஓா் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்ற அமைப்பின் 5-ஆவது விதியை ரஷ்யா நினைவில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All