Search

Rebecca

Sep 8, 2025

உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும்!

உக்ரைன் மீது ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதனால் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஸெலென்ஸ்கி சமூகவலைதளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ரஷ்யா இன்னும் தாக்குதல் நடத்தி உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயற்சிக்கிறது. புட்டின் உலகை சோதிக்கிறார்.

ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் பிற கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். புட்டின் பேச்சு வார்த்தைகளை விரும்பவில்லை இவ்வாறு ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளiதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All