SEGU
Oct 21, 2025
உள்ளூர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு ஆடையில்
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவ்வாறு ஆடைகளை அணிந்து வருவதற்கு சபாநாயகர் இன்று அனுமதி வழங்கினார்.
அதன்படி, நாளை பாராளுமன்றுக்கு வரும்போது தொடர்புடைய அறிவிப்புக்கு ஏற்ப செயல்படுமாறு சபாநாயகர் இன்று அறிவித்தார்.
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அடையாளப்படுத்தும் வகையில், நாளை பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டிய சின்னத்தை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தயாரித்துள்ளதாகவும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








