Search

SEGU

Nov 8, 2025

உள்ளூர்

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியாமி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கு கிழக்கு இணை இணைப்பாளர் யார்ட்சன் பிகிராடோ தலைமை உரை மற்றும் வரவேற்பு உரை மேற்கொண்டார்.

தொடர்ந்து முகையதீன் சிவலை பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் மௌலவி ஏ.எம்.ஏ அஸீஸ், வன்முறையற்ற மோதல் தீர்வுக்கான மையம் இயக்குநர் ஆறுமுகம் சொர்ணலிங்கம் ,யாழ்ப்பாண மகளிர் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திருமதி. எம்.ஏ.எம்.சியானா, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் கலை மற்றும் கலாச்சார பீட பேராசிரியர் எஸ். ஜெயசங்கர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எம்.எல்.எம்.இஸ்ஸதீன், மனித உரிமை ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ ,வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் துரையப்பா காந்தன், சிறப்பு பேச்சுக்களை மேற்கொண்டனர்.

இறுதியாக அறிக்கை வழங்குதல் நிகழ்வு நடைபெற்று திருமதி விநாயகமூர்த்தி கமலினி நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp