Search

Rebecca

Sep 10, 2025

உலகம்

நேபாளம் நாட்டில் நடைபெற்று வரும் மோதல்களில் இலங்கையர்கள்

நேபாளம் நாட்டில் நடைபெற்று வரும் மோதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் இதுவரையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காத்மண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டிலுள்ள சமூக ஊடகக் குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுமார் 102 இலங்கையர்கள் அந் நாட்டில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் எந் நேரத்திலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகம் அவதானத்துடன் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று (09) இரவு 10 மணி முதல் நேபாள நாட்டின் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பினை இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்க அந்நாட்டு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஆரம்பமான இந்த போராட்டாத்தால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All