SEGU
Nov 7, 2025
உலகம்
அமெரிக்கா ஏவுகணை சோதனையில்
ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என போர் துறைக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தநிலையில், ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் பலவும் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில், தன்னிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா சோதனை செய்ய வேண்டும் என போர் துறைக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட் மேன் - 3 ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று (06)வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








