Search

SEGU

Oct 21, 2025

உலகம்

அயோத்தியில் 26 லட்சம் தீபம் ஏற்றி உலக சாதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் அயோத்தி நகரில் ஒரே இடத்தில் 26 இலட்சத்திற்கும் அதிக அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நடத்தியது.

ஒரே சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி 26 இலட்சத்து 17 ஆயிரத்து 215 அகல் விளக்குகளை ஏற்றி இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இதனிடையே, இரண்டாயிரத்து 128 பேர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆரார்த்தி எடுத்தமையும் கின்னஸ் சாதனையாக பதிவாகியுள்ளது.

இரு கின்னஸ் சாதனைகளுக்கான சான்றிதழ்களையும் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp