Search

Sep 4, 2025

உள்ளூர்

ஹெரோயின், போலி ஆவணங்கள், ஆயுதங்களுடன் இளைஞர் கைது !

களுத்துறை, கெமுனு மாவத்தை பகுதியில் போலி ஆவணங்கள், ஹெரோயின் போதைப்பொருள், ஆயுதங்களுடன் இளைஞன் ஒருவன் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என அடையாளங் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து போலி ஆவணங்கள், 06 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 4 கூரிய ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All