Search

Oct 22, 2025

உள்ளூர்

கொழும்பில் நாளை நீர் வெட்டு !

கொழும்பில் நாளை (23) காலை 10 மணி முதல் 10 மணித்தியால நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக அதிலிருந்து நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 01 - 15 வரையில், பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்கொட, கோட்டை, ராஜகிரிய மற்றும் நாவல பகுதிகளிலும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக நாளை காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை மீரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல,கொலன்னாவ, ஐடிஎச்,கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டி,ஒருகொடவத்த,மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All