Search

Oct 27, 2025

உள்ளூர்

வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு வாக்குரிமை - அமைச்சர் விஜித ஹேரத்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக அமைச்சகமும் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டு, தற்போது இலக்கை விரைவாக அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் இன்று (27) கலந்து கொண்டே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மேலும், “வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கும் தேவையான சட்ட கட்டமைப்பை நிறுவுவதற்கும் தேவையான வசதிகளை வழங்குவதற்காக பொது நிர்வாக அமைச்சினால் ஏற்கனவே ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தவும், தேவையான சட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp