Jino
Sep 23, 2025
உள்ளூர்
கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் இருவர் கைது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (23) காலை, ரூ.5 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள 5.092 கிலோ "குஷ்" போதைப்பொருளுடன் இரண்டு பயணிகள் சிக்கியுள்ளனர்.
பெண் சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த 29 வயதானவர் என்றும் மற்றைய சந்தேகநபர் இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதானவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் இரண்டு பயணப்பொதிகள் மற்றும் மேலும் ஒரு பையிலும், 05 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 092 கிராம் "குஷ்" போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கைதானவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All