Jino
Sep 11, 2025
உள்ளூர்
போக்குவரத்து கட்டுப்பாடுகள் தீவிரம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க !
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- இது குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்த அவர்,
100 கி.மீ. கடந்தும் மாகாணங்களைக் கடக்கும் பேருந்துகள் மற்றும் வேன்கள், பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் டயர்கள், பிரேக்குகள், கண்ணாடிகள் உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்பட்ட ஆய்வுச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் இது பரிந்துரைக்கப்பட்டதாகவும், பயணிகள் இதனை முன்பே உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், பொது போக்குவரத்தில் பாதுகாப்பை தேவையான விதிமுறைகள் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All