Jino
Oct 11, 2025
உள்ளூர்
நாட்டின் இன்றைய வானிலை!
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யலாம்.
மேலும், ஏனைய பகுதிகளிலும் பிற்பகலில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் காலைவேளையில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னலுடன் கூடிய மழைநேரங்களில், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களுக்கு எதிராக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All