Jino
Sep 26, 2025
உள்ளூர்
முன்பிணை கோரிய மனுஷ நாணயக்கார.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் தன்னை விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு ஒன்றை முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க.எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், குறித்த முன்பிணை மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு, இந்த மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All