Search

Oct 12, 2025

உள்ளூர்

மலையக மக்களின் கௌரவத்தை மதித்து அரசாங்கம் செயற்படும் - ஜனாதிபதி உறுதி!

பண்டாரவளையில் இன்று இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் மேல் மட்டத்திலுள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதிபட கூறினார்.

அதேவேளை, போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் எந்தவித பின்னடைவும் இருக்காது எனவும் தெரிவித்தார்.

200 வருடங்களாக மலையகத்தில் வாழும் ஒரு சமூகத்திற்கு காணி உரிமை கூட இல்லாத நிலையை மாற்ற, அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1700 ரூபா சம்பள கோரிக்கை, சுகாதாரம், கல்வி, குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாக மலையக மக்களுக்கு நியாயமான வாழ்க்கை தரம் வழங்க பல திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

மலையக மக்களின் கௌரவத்தையும் கலாசாரத்தையும் மதித்து, அவர்களது சமூகத்தை உயர்த்த அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் எனவும் ஜனாதிபதி இந் நிகழ்வில் உறுதியளித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All