Jino
Aug 29, 2025
உள்ளூர்
அரசு அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது - நாமல் குற்றச்சாட்டு.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து படைவீரர்கள், தொழிற்சங்கங்கள், அரச ஊழியர்கள் மற்றும் தேசிய இயக்கங்கள் என்பனவற்றை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களையும் படைவீரர்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதனை ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். படைவீரர்கள் வேட்டையாடப்படுவதனை முற்றிலுமாக எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் எந்தக் காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All