Oct 28, 2025
உள்ளூர்
மஹிந்தானந்த - நளின் மேல்முறையீடுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையில், உச்ச நீதிமன்றம் ஜனவரி 20, 2026 அன்று மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுக்கள் அழைக்கப்பட்ட நேரத்தில், தற்போது காவலில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








