Search

Sep 3, 2025

உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.

பாகிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் மறைந்த தேசியவாத தலைவர் சர்தார் அத்தாவுல்லா மெங்கல்-லின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணி முடிந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது மைதானத்தின் அருகில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All