Jino
Aug 25, 2025
உள்ளூர்
வெல்லம்பிட்டியில் அதிகாலை துப்பாக்கிச் சூடு.
கொழும்பு வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய 3 சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All