Search

Aug 25, 2025

உள்ளூர்

வெல்லம்பிட்டியில் அதிகாலை துப்பாக்கிச் சூடு.

கொழும்பு வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய 3 சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All