Search

Oct 30, 2025

உள்ளூர்

கல்வி அமைச்சுக்கு எதிராக - இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம்.

2026 ஜனவரி முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை என கல்வி அமைச்சுஅறிவித்ததையடுத்து, அதற்கு இணங்கப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறக்கும்போது, ஒருநாள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்கம் இத்தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், இது எந்த கல்வி அல்லது உளவியல் ஆய்வின் அடிப்படையிலும் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp