Jino
Oct 5, 2025
உள்ளூர்
எல்பிட்டியவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு.
எல்பிட்டிய, ஓமத்தவில் ஒரு வீட்டின் மீது நேற்று (05) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை. என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகாத நிலையில்,
போதைப்பொருள் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All