Search

Jino

Sep 4, 2025

உள்ளூர்

துப்பாக்கிச் சூடு வழக்கு: சட்டத்தரணிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி.

கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை கைதுசெய்வதற்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சட்டத்தரணி சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ், துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் சந்தேகிக்கப்படும் சட்டத்தரணிக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குறித்த சட்டத்தரணியை கைதுசெய்வதற்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு 14 நாட்கள் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp