Oct 24, 2025
உள்ளூர்
பிரமிட் திட்டம் தொடர்பாக ஏழு பேர் கைது.
பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் நிர்வகித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேர் நேற்று (23) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 40 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இவர்கள் இரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்நெவ, ஹோகந்தர, பேராதனை மற்றும் கொழும்பு 04 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையின் பின்னர் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








