Search

Sep 17, 2025

உள்ளூர்

சம்பத் மனம்பேரி நீதிமன்றில் !

சம்பத் மனம்பேரிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மித்தெனிய பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All