Search

Jino

Aug 27, 2025

உள்ளூர்

விரைவில் நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டு நேற்றையதினம் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இந் நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் இலங்கையின் அரசியல் பரப்பில் மிக அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், வைத்தியசாலையில் இருந்து அவர் வெளியேறி, அவரது உடல் நிலை சீரானதும் நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு கடந்த சில நாட்களாக ஆதரவாக இருந்த பொதுமக்களுக்கு ரணில் தரப்பில் இருந்து நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp