Search

Jino

Sep 27, 2025

உள்ளூர்

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்பாட்டம் !

மன்னார் பகுதியில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொலிசாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டும் வவுனியாவில் இன்று ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் வவுனியாமாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

- இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

மன்னாரில் கடந்த56 நாட்களாக போராடி வரும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்தஅரசு மக்களுக்கு விரோதமான முறையில் காட்டுமிராண்டித்தனமான செயற்ப்பாட்டை முன்னெடுத்துள்ளது. எனவே இந்த திட்டத்தை அரசு உணடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும். என்று தெரிவித்தனர்.

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்ற போராட்டக்காறர்கள் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கிவைத்தனர்.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp