Rebecca
Nov 3, 2025
உள்ளூர்
பிக்குணி ஒருவரை அச்சுறுத்திய இருவர் கைது
பிக்குணி ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்கள் வத்தளை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அந்த இரண்டு நபர்கள் பிக்குணியை திட்டி மிரட்டும் சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரும் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ரத்னாவலி ஆராமய அருகில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








