Rebecca
Nov 17, 2025
உலகம்
சவுதியில் கோர விபத்து : 42 பேர் பலி
சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முஃப்ரிஹாத் அருகே அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது, பேருந்து மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மோதலுக்குப் பிறகு பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
பலியானவர்களில் குறைந்தது 11 பெண்களும், 10 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்பட்ட போதும் அந்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








