Search

Rebecca

Nov 6, 2025

உள்ளூர்

குளிக்கச் சென்ற இளைஞன் மாயம்

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போனவர் 19 வயதுடைய ரங்சேகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன இளைஞன் மேலும் 5 பேருடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோதே கடலில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் ஹிரிகெட்டிய பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உயிர்காப்பு உத்தியோகத்தர்களும் மற்றும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp