Search

Rebecca

Nov 13, 2025

உள்ளூர்

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்படுகிறது. அதன்படி, 09 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் எச்சரிக்கிறது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp