Search

Rebecca

Nov 6, 2025

உள்ளூர்

இந்திய சபையில் சிறப்புரையாற்றிய சஜித்

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுடில்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்திய சபையில் சிறப்புரையாற்றினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நாகரிக மற்றும் ஜனநாயக உறவுகளை எதிர்க்கட்சித் தலைவர் மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தினார்.

உலகளாவிய இராஜதந்திர நடவடிக்கைகளில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பரிணாமம் கண்டு வரும் பங்களிப்பைப் பாராட்டிய சஜித் பிரேமதாச, இந்தியாவை வியூக சுயாட்சியின் மற்றும் தென் ஒத்துழைப்பின் கலங்கரை விளக்கம் என்று வர்ணித்தார்.

இந்தியப் பெருங்கடலை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp