Search

Rebecca

Nov 17, 2025

உள்ளூர்

ஐ.ம.சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!

பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன் ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி உத்தியோகத்தராகவும் கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீர் சுற்றிவளைப்பின்போது விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த 86 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதுடன் இன்று (17) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All