Search

Rebecca

Nov 17, 2025

உள்ளூர்

இரத்தினபுரியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி மாவட்டம், வெவெல்வத்த பகுதியில் உள்ள ஒரு சிறிய நீர்மின் நிலையத்தின் அணைக்கட்டு அருகே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த 21 வயது பெண்ணின் சடலம் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டம் ஹபுகஸ்தென்ன பஹல பகுதியில் உள்ள கெல்ல கல்லெல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கியில் இருந்து நிதி உதவி பெறுவதற்காக இரத்தினபுரி நகரத்திற்குச் சென்றிருந்ததாகவும், வீடு திரும்பும் போது ஏதேனும் அசம்பாவிதத்துக்கு முகம்கொடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவரது பல உடமைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp