Rebecca
Nov 24, 2025
உலகம்
பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள பெஷாவோர் நகரின் துணை இராணுவ படைத் தலைமையகத்தை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆயுததாரிகளும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தலைமையக கட்டிடத்தின் நுழைவாயில் பகுதியில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீதான இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







