Search

Rebecca

Nov 23, 2025

உள்ளூர்

இன்றும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

தொடரும் பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்றும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 19,400 கன அடி நீர் விடுவிக்கப்படுவதாக வாரியபொல பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 3 அங்குல அளவிலும், 4 வான் கதவுகள் 2 அங்குல அளவிலும் திறக்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து வினாடிக்கு 3,720 கன அடி நீர் மீ ஓயாவிற்கு விடுவிக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp