Rebecca
Nov 3, 2025
உள்ளூர்
புகையிரத கடவை அமைத்து தருமாறு கோரிக்கை
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், மாங்குளம் புகையிரத நிலையத்துக்கும் முறுகண்டி புகையிரத நிலையத்துக்கும் இடைப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 302.6 கிலோமீற்றர் பகுதியில் புகையிரத கடவை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் எமக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும், மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாகவும் இரண்டு தடவைகள் புகையிரத திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும் பாதிக்கப்படுவதுடன் உயிர் பயத்துடனேயே நடமாடவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








