Search

Rebecca

Nov 3, 2025

உள்ளூர்

கல்முனை பாடசாலை அதிபர் செய்த சாதனை

கல்முனை கமு/அஸ்-ஸ/ஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இன்று பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் சிறப்பாக பாடசாலை வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை அஸ்-ஸ/ஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ச/ஹதுல் நஜீம், கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பிரதிப் பணிப்பாளர்(நிர்வாகம்) எம்.எச்.எம் ஜாபீர், பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இப்பாடசாலையில் சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் அதிதிகளால் 04 தடவை உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All