Search

Nov 16, 2025

உள்ளூர்

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உரிமம் இல்லாமல் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த ஒருவரை சிலாபம் புலனாய்வுப் பிரிவு கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிலாபம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 03 தோட்டாக்கள், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 460 சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 202 லிட்டர் கோடா ஆகியவற்றுடன் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பத்து பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All