Search

Rebecca

Nov 27, 2025

உள்ளூர்

நிலவும் சிரற்ற காலநிலையால் 31 பேர் பலி!

2025 நவம்பர் 17 முதல் 27 வரை இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு பேரிடர் சூழ்நிலைகளில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கூற்றுப்படி, இந்த காலகட்டத்தில் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 17 மாவட்டங்களில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 4,008 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

41 குடும்பங்களைச் சேர்ந்த 131 நபர்கள் தற்போது 05 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் அவர்களது உறவினர்களின் வீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All