Search

Rebecca

Nov 10, 2025

உள்ளூர்

உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்பு!

மாத்தளை, இரத்தோட்டை, வேரகம, இகிரியகொல்ல காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

15 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த யானை நீண்ட நாட்களாக வேரகம பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp